- சத்தியமங்கலம்
- தாளவாடி காடு
- சத்தியமங்கலம் புலி காப்பகம்
- தலவாடி வனம்
- திப்பு வட்டம்
- தலவாடி நகர்
- தின மலர்
சத்தியமங்கலம்,மார்ச்23: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் நடமாடுகின்றன. இதற்கிடையே நேற்று காலை தாளவாடி வனப்பகுதியில் வெளியேறிய புள்ளிமான் வழி தெரியாமல் வந்து தாளவாடி நகர் பகுதியில் உள்ள திப்பு சர்கிள் பகுதியில் நடமாடியது. அப்போது ஊருக்குள் மான் நடமாடுவதை கண்ட தெரு நாய்கள் மானை தரத்த தொடங்கியதால் அச்சமடைந்த மான் அப்பகுதியில் உள்ள அப்துல் பாசித் என்பவரது வீட்டிற்குள் நுழைந்தது.
வீட்டுக்குள் புள்ளிமான் நுழைந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்த அப்துல் பாசித் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மானை பாதுகாப்பாக பிடித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த புள்ளி மானை மீட்டு தாளவாடி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.
The post வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் appeared first on Dinakaran.